இராமானுஜன் இறந்து நூறாண்டுகள் ஆகிறது. அவரது அதீத, இன்றளவும் உலகம் மீண்டும் காணாத, கணித மேதையான அவரை பலகோணங்களில் காணலாம். அவர் ஒரு தமிழ்மகன் கூட என்றும் வலியுறுத்தி சொல்லவேண்டியது உண்டு. உலகளாவிய பலரும் இராமானுஜனின் கதையில் தமது வேட்கைக்கு ஊக்குவிப்பு தேடுகையில், தமிழராகிய நாமும் அவரது வெற்றிகளில் ஒரு வழி, ஒரு இலட்சிய இலக்கு தெறிகிறது என்றும் எண்ணலாம்; இவரை ஒரு தனிப்பட்ட இனக்குழு, மொழி, நாடு அல்லது துறைசார் நிபுணர் என்று மட்டும் பார்க்காமல் அவரது ஆளுமையில், வெற்றிவேட்கையில், அகால மறைவில் ஒரு மனித சோதனை-வெற்றி-பரிதாபம் என்றெல்லாம் பிரபஞ்சத்தின் உண்மைகளை கண்ட ஒரு தமிழ்மகனாகவும் பார்க்கிறோம்.