தமிழில் ஏன் நாம் செயல்படுகிறோம் என்று பலருக்கும் குறிப்பிட்டவரைப்பற்றி ஒரு கருத்து இருக்கும்பொழுது செயல்படும் நம்மவர்க்கு என்ன புரிதல் இருக்கிறது? ஒரு கண்ணாடியில் பார்த்தால் போதுமே – புலப்படும் அந்த பிம்பத்தின் உரிமையாளர். அவர்களது மனதில் நினைவோட்டத்தில் எண்ண ஓடுகிறது என்று எளிதில் சொல்லமுடியுமா என்ன – ஒட்டு மொத்த உளவியல், மனோதத்துவியல் துறைகளே இதனை சுற்றி கட்டமைக்கப்பட்டவை. அவர்கள் கண்டதைவிட புதிதாக நாம் எதுவும் இந்த வலைப்பதிவின் நீளத்தில் புரிந்துவிடலாமா என்ன? விளையாடாதீங்க.
சரி அப்பொழுது பொதுவான தனிமனித பொழுதுபோக்கு நேரங்களில் பங்களிப்புகள் நடத்தும் நமக்கு என்ன தேவைகள் இருக்கிறது? இவை எவ்வாராவது உறுமாறி தமிழ் பங்களிப்புகளாக மாற்றமடைகின்றன என்பதுதான் பலருக்கும் உள்ள செயல்பாட்டு நோக்கமாக அமைகிறது.
“தமிழ் சற்று தேக்கம் அடைந்த மொழி, தமிழில் செயல்படுவது ஒரு அடாவிசம் (atavism),” என்றெல்லாம் மற்ற இந்திய மொழியினர்கள் குற்றம் சாட்டினாலோ அல்லது மனதிற்குள் செறுக்காக எடைபோட்டு மதிப்பிட்டாலோ அவர்களுக்கு தமிழில் நடந்த, நடக்கும் விவாதங்கள், புரட்சி, போராட்டங்கள், அழகியல், முரண் போன்ற அறிவுசார்விவாதங்கள் பற்றியும் ஒன்றுமோ அறியாமையை மட்டும் சுட்டுகிறது.
ஆகட்டும் அவர்கள் கண்களுக்கு அரைப்பழங்குடியினராக மட்டும் தென்பட்டதால் அவர்களது (ஆங்கிலமல்லாத) மொழி வளர்ச்சியடைந்ததாக நான்கண்டதில்லை. எனினும் தமிழில் செயல்படும் பலரும் நெருக்கடிக்கிடையில் ஒரு பெரும்பாலான ஆங்கில சூழலில் பணியாற்றிக்கொண்டும், அல்லது மாணவரான சூழலில் தொடங்கி திறம்பட 30இல் இருந்து 60ஆண்டுகள் வரை பின்னடைந்த தமிழ் தகவல் ஆராய்ச்சிகளை தாமாகவே முன்னெடுத்து செய்கின்றனர். இவர்களை atavist, neanderthal என்றெல்லாம் பழிப்பது வெகுவான liberal/libertarian அரசியல் பார்வைக்குள் அடங்காதது. இதற்கு முன்சான்றே தமிழர்களை தற்குறைவாக பார்ப்பதாக மட்டுமே, “ஏய் மடராசி” என்றேல்லாம் சொல்வது போலவே அமைகிறது.
தமிழில் செயல்படுபவர்கள் பணத்திற்காகவும், ஆன்மீகம், பதவி, அரசியல், மொழி, இனம், தத்துவம், அழகியல், தொன்மை, தொடர்ச்சி, புதுமை என்றும் தனித்தனியாகவோ அல்லது பலவற்றினையும் கருத்தில்கொண்டும் செயல்படுவதனால் மொழி மேம்பாடு அடைகிறது.
இந்த எண்ணிம உலகில் 1-0 தவிர யார் மொழி கணினியில் செலுத்தப்பட வேண்டும் என்பது ஒரு அரசியல் – அதில் பிழைக்காதவர்கள் மொழிகள் தேக்கத்தை அல்லது ஒதுக்கப்படும் நிலைக்க தள்ளப்படுவதே ஒரு பின்னடைவு. மொழியையும் அதில் உள்ள கருத்துக்களையும் நாம் மனதில் அடைந்த முன்னேற்றத்திற்கும் வாழ்க்கை வழிக்கும் இசைவாக முன்னெடுத்துசெல்வது பெருமை – பன்மைத்துவத்தின் ஒரு உச்ச கட்டமாகவும் பார்க்கலாம். தமிழில் செயல்படுவது ஒரு புரிதல் – “நீ யார்,” என்ற தேடலின் ஒரு மிகப்பெரிய அடையாள கேள்வியின் பயணத்தில் உள்ள காட்டுப்பாதை. தாங்கள் பேசிய மொழிகள் பழுதடையப்பார்ப்பது ஒரு அடாவடி அடாவிசம்.