சமிபத்தில், கவிஞர் சல்மா வரிகள் போல, எல்லாரும் வௌவால்களா இந்த கொரொனாவினால் நிலைகுலைந்தனர். அவர்களின் நீண்ட பட்டியலில் நானும் ஒருவன் – ஆனால் அதிகளவு பாதிப்பு ஏதுமில்லை – வீடு, வாசல், சோறு, தண்ணி இதுக்கெல்லாம் திண்டாட்டம் இல்லை என்றாலும், இங்கு அமெரிக்க மண்ணில் 20% வேலையிழந்த பலரையும் போல் வேலைக்கு மட்டும் காவுவாங்கிட்டேன்.
சரி. இந்த நேரத்தில் மற்ற சிலபல செயல்கள் முடிவில்லாமல் தொடங்கியதை முடித்துவைக்க சில படிகள் எடுக்க நேரம் கிடைத்தது. மேலோகத்தில் இருப்பவன், என்றும் அதை நப்புபவர்கள், ஒரு கதவை மூடினால் மற்றொரு கதவை திறப்பார் என்றபடியாக இது தமிழ் வெளியில் எப்போதும் நம்மளை கொண்டு சேர்த்தது.
மொத்தம் 3-ஆய்வுகள், பெரும்பாலும், முடிவு பெற்ற நிலையில் இருந்தன; அவையாவன,
- தமிழ் உயிரெழுத்துக்கள் செயற்கைப்பின்னல் வழியாக திறன்கண்டுகொள்வது. இதை, ஜூன் 2019-இல் தொடங்கிய ஒரு ஆய்வு என்றாலும் இந்த மூன்று கால இடைவெளியில் தான் இன்று முடிவடைந்தது. இதனை ArXiV-இல் கற்பூரம் மீது சத்தியமிட்டாமல் ஏழு நாள் தாமதத்துடன் வெளியானது. தலைப்பு: “Tamil Vowel Recognition With Augmented MNIST-like Data Set,” https://arxiv.org/abs/2006.08367
- அடுத்த கட்டுரை “Generation and Parsing of Number to Words in Tamil”, இதை ArXiV ஏற்க மறுத்தது – காரணம் எங்கள் வாசகர்களுக்கு இது சுவாரசியமானதல்ல என்ற சாக்கைச்சொல்லி மழுப்பினார்கள். இதை நான் மற்றொறு மொழியியல் மாநாட்டிற்கு அனுப்பியுள்ளேன் – என்ன விளைவு என்று பார்க்கலாம்.
- அடுத்த கட்டுரை “Algorithm to correct missing pulli signs in printed Tamil text,” என்பது [2] போல் அதே கதி. பார்க்கலாம்.
- கடைசியாக எழுத நினைத்தது ஆனால் நேரம் கிடைக்கவில்லாமல் போனது என்றால் “தமிழில் சொற்களை ஒலி எண்களாக பிரிப்பது” (Syllable identification) என்பதை bigram/unigram என்ற எழுத்தளவான புள்ளியியல் வடிவில் கொண்டு இவற்றை செயல்படுத்துவது. இதற்கு உங்களுக்கு ஆர்வம் இருந்தால் என்னுடன் இணைந்து செயல்படலாம் வாங்க.
இந்த பேரிடர் காலகட்டத்தில் என்னை அடைக்கலம் கொடுப்பதில் ஒன்று மொழி, மொழியியல் அதில் வசிக்கும், செயல்படும் அஞ்சா நெஞ்சர்கள். இதையும் காலம் கடந்து செல்வோம். உருதுணையாக இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றி.
-முத்து