16-ஆவது தமிழ் இணைய மாநாடு, டொராண்டோ, கனடாவில் சென்ற வாரம் சிறப்பாக நடைபெற்றது.
எனக்கும் ஒரு நல்ல அறிமுகவாகவும், அனுபவமாகவும் இருந்தது. மாநாடு நிறைவு பெரும் நாள் — at University of Toronto Scarborough (UTSC). இந்த படங்கள் எடுக்கப்பட்டன:
நன்றி, நினைவுகள்
எனக்கு நிரைய விஷயங்கள் புதிதும், பலதும், பழையதும் புரிந்தது. எனக்கும் வயசாக நான் தொடர்ந்து வேலை செய்த அறிஞர்களிடத்து நான் ஞாயமாக கண்ட ஒரு ஆதங்கம் “இளைஞர்கள் முன்னோடிகளின் வேலைகளையும், பங்களிப்புகளையும் சரிவர மதிப்பதில்லை” என்ற ஒரு கருத்து. இது பெரும்பாலும் உண்மை. ஒரு கருவி, செயல்பாடு உருவாக்கிய பின் அதனை அடடா இது தானா – நம்மளே பன்னிருக்கலாமே என்று ஒரு “post-hoc”, “after the fact” நினைப்பில் முன்வந்த உருவாக்கங்களை நாம் லேசுபடுத்தியுள்ளோம்.
தமிழ் இணைய மாநாடு (2017)-இல் வரலாறு படைத்த தமிழறிஞர்களுடன் கலந்துரையாடியது மகிழ்ச்சி. நியூட்டன் சொன்னது, “standing on shoulders of giants”, போன்ற நமது இன்றைய நிலைக்கு காரணம் இவர்களை போன்ற சான்றோரின் பணி. நம்ம Jimmy Wales, Steve Jobs, Richard Stallman போன்றவர்களை மட்டும் ஒரு கடவுள் அளவுக்கு பார்க்கிறோம் – நம்மது தமிழர்களை நாம் மிகைப்படுத்துவதும், பெருமிதம் கொண்டும், கொண்டாடுவதும் அரிது.
கடன்
எனது பயனத்தை நிஜமாக்கிய மாநாடு குழு தலைவர் பேரா. திரு. செல்வா அவர்களுக்கும், எனது குடும்பத்தினருக்கும், எழில் மொழி குழு, திறமூல தமிழ் மென்பொருள் நண்பர்களுக்கும் நன்றி.
குறிப்பாக எழில் திட்டம் நிறைய கடன்பட்டது – முக்கியமாக எனது பங்களிப்பாளர்களுக்கும், எங்கள் குடும்பகளுக்கும் முன்னிலையில். எங்கோ செல்கிறோம், விரைவில் முன்னேற்றமோ, முடிவோ வரும்.
மேலும் புது சவால்கள் வரும், அத்துடன் துணிச்சலான தீர்வுகளும் வரும். அச்சம் இல்லை என்பது இந்திய சுதந்திர போராட்டம் என்பதற்கு மட்டும் பாரதி சொன்னதில்லை, தமிழில் இயங்கும் நமக் கும் கூட இது பொருந்துமோ!
பொருளடக்கம்
அகத்து 25
முதல் நாள் என்னால் போக முடியவில்லை; இதனை பற்றி இங்கு படிக்கலாம்.
அகத்து 26
இரண்டாம் நாள் திரு. முத்து நெடுமாறன் அவர்கள் “கருவாக்கல் – உருவாக்கல் – விரிவாக்கல்” என்ற தலைப்பில் பேசினார். நல்ல உரை, இது product development பற்றியும், அவரது ஏறத்தாழ 30-ஆண்டு அனுபவத்தை தொட்டு அற்புதமான ஒரு பேச்சாக அமைந்தது. அவர் சொன்னதில் சில முக்கியமானது, மற்ற இடங்களிலும் நான் கேட்டிருக்கிறேன் ஆனால் முதலில் தமிழ் வெளியில் இவரிடமே.
- தமிழினால் மட்டும் உங்கள் உத்தி வியாபாரம்/பயன்பாடு ஆகாது. அதற்க்கு முதல் நிலை பயனர் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும்.
- எளிமை, பயனர் அனுபவம் எளிதாக இருத்தல் வேண்டும்.
- உரிமம் – இலவசமாக கொத்தாலும் ஒரு உத்தி/செயலி அபாரமாக வெற்றி அடையும் என்று சொல்ல முடியாது.
- மேலும், பயனர்கள் எப்படி தமிழ் இடைமுகங்களை புறக்கணிக்கின்றனர் என்றும் உதாரணங்கள் கூறினார்.
அடுத்து பேரா. திரு. வாசு அரங்கநாதன், அவர்கள் பேசினார். அவர் தமிழில் எப்படி மொழியியல் வழியிலும் JSON-வழி tagging செய்வது, ஒரு crowdsourced-ஆக இதை எப்படி செய்து செவ்விலக்கியங்களை படிப்பது என்று அவர் ஆராய்ச்சி செய்தும் உருவாக்கி வரும் அந்த ஒரு மென்பொருள் வலைதளத்தை உதாரணம் காட்டினார். இது ஒரு பெரிய மேம்பாடாக எனக்கு தெரிந்தது.
எனது படைப்பான, “Tamil open-source challenges and opporunities” என்கிற தலைப்பில் வேகமாக பேசினேன்; எதிர்பாராத விதமாக சில மூத்த பேராசிரியர் நடுவில், அமெரிக்க பல்கலை வரம்பில் இல்லாதபடி, கேள்விகள் எழுப்பியும் அபிப்ராயங்களை எழுப்பியும் சற்று திசை திருப்ப முயன்றார்; நான் “உங்கள் விமரிசனங்களை ஒப்பு கொள்கிறேன்,” என்றபடி பேசி சென்றேன். எனது பேச்சில் நல்ல ஈடுபாடு இருந்ததாக தெரிந்தது. எனது திரை-படிமங்கள் இங்கு slideshare-இல்.
எனக்கடுத்தது நினைவில் உள்ளபடியான கட்டுரை “நூலகம் அறக்கட்டளை”-யின் நற்கீரன் அவர் படைத்தார். தமிழில் object-entity தொடர்பாடல் உருவாக்குதல் பற்றியும் ஒரு ontology பயன்செய்து semantic web உருவாக்குதலை பற்றியும் மிக துல்லியமாக பேசினார்.
அகத்து 27
இன்று சிறப்புரை ஆற்றியது பேரா. திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் மதுரை திட்டம் பற்றி, அதன் தோற்றம், அவரது கணிமை ஈடுபாடு, வரலாறு பற்றி மிக அருமையாக பேசினார். மதுரை திட்டம் பற்றி எப்படி 30-ஆண்டு காலமாக தொடர்ந்து புத்தகங்களை எண்ணிம உரையாக பராமரித்து வருகிறார் என்றும் கூறினார்.
இளங்கோ சேரன் அவர் “clj-thamil” பற்றியும் prefix tries தரவமைப்பு (data structure) பற்றியும் பேசினார். இதில் அவர் நேர்வழி பயன்பாடு (demo) காட்டி எல்லாரையும் அசத்திட்டார். அவரது திரை-படிமங்கள் மற்றும் கட்டுரை இங்கு.
எழில் பதிவெண் 0.99 வெளியீடு படைப்பு
எனது பங்கிற்கு நான் அதிகமாக எதிர்பார்த்து கொண்டிருந்த எழில் கணினி மொழி வெளியீடு பற்றிய சவால்கள் பற்றிய கட்டுரை வாசிக்க நேரம் வந்தது; கட்டுரை திரை படிவங்கள் இங்கே. நான் அரங்கில் உள்ளோரை கேள்விகளை படைப்பு முடியும் வரை சேமித்து கொள்ள சொன்னேன். எழில் வளர்ச்சி பற்றியும், சந்தித்த முட்டுக்கட்டைகளையும் பற்றியும் எப்படி இன்றுள்ள நிலையை எட்டினோம் என்றும் சொன்னேன். “தமிழில் நிரல் எழுது” என்ற புத்தகத்தை விளம்பரப்படுத்தினேன். பேச்சு முடிந்தபின் சிலருக்கு இந்த புத்தகத்தை கையெழுத்திட்டு சிறப்பு நினைவாகவும், மற்றவருக்கு கனடிய வெள்ளி ஆறரை-இக்கும் விற்பனை செய்தேன். ரொம்ப கேள்விகள் இல்லை. நேரம் அதிகம் சென்றது – உணவும் வேளை ஆகியது. – ஆனால் எல்லோரும் அப்பாடா என்று என்னைவிட சற்று பெருமூச்சு விட்ட மாதிரி எனக்கு நலைப்பின்னர் தோன்றியது. என்ன எதிர்பார்த்தேன் என்று தெரியவில்லை
விழா மலர்
விழா மலரில் நானும், நண்பர் கணபதியுடன் ஒரு கட்டுரை “GPUs powering the AI revolution,” என்று எழுதினோம். மற்ற நல்ல கேள்விகள் கட்டுரைகள்.
- “தமிழில் ஒரு திற மூல சொல் திருத்தி” அதன் முக்கியத்துவம் பற்றி வள்ளிபுரம் சுகுந்தன் நல்ல கட்டுரை எழுதியுள்ளார்.
- பேரா. பொன்னவைக்கோ, TACE16 பற்றி எவரேனும் இதனை மென்பொருளாக்கி, பரிசோதித்தல் வேண்டும் என்று ஒரு தேவையை முன்வைத்தார்; இதற்க்கு Unicode extended plane-இல் இடம் உள்ளதாக ஒப்புதல் வந்துள்ளது என்றும் சொன்னார், ஆனால் எதுவும் மென்பொருட்கள் பொதுவாக/பரவலாக இதுவரை இல்லை.
- விழா மலரில் பேராசிரியர் திருமதி. ராஜம் கிருஷ்ணன், மாநாடு தலைவர் திரு. செ. இரா. செல்வகுமார் பற்றி சிலாகித்து அருமையாக ஒரு வாழ்த்து எழுதியிருந்தார்.
முடிவுரை
இன்னும் கூடுதலாக நேரம் செலவிடமுடியவில்லை என்பதும் மனதில் இருந்தாலும், So long Toronto, Canada. மீண்டும் சந்திப்போம் – நயாகரா, Space needle, போன்ற சுற்றுலாக்களை அப்போது காண்போம்; மனைவியும் வருவாளோ என்னமோ. அதுவரை வேலைகள் நிறைய உள்ளன.