வாய்ப்பாடு
கணிதம் என்பதை அறுவை, போர் ஆக்குவது என்பது சிறுவர்களுக்கு உடனடியாக விளங்காத சூத்திரங்களையும், வாய்ப்பாடு பட்டியல்களையும் நினைவில் கொள்ள செய்வது. பத்தாத குறையாக கேள்வி எழுப்பும் குழந்தைகளையும் அடி கொடுப்பது – இதுவே நமது இன்றைய பள்ளி நிலை. இதன் விளைவு என்ன ? கணக்கு வாத்தி என்பவரை கண்டாலே ஓடும் பயம் மட்டுமே பெரும்பாலானோர் மனதில் கொள்கின்றனர்.
மாறாக, வாய்ப்பாடு என்பது என்ன ?
இரு எண்களை பெருக்க வேண்டுமானால் முதலில் அவற்றின் வாய்ப்பாடு நினைவில் இருந்தால் எளிதாக கணிதம் செய்யலாம்.
பெருக்கல் கணித செயல்பாட்டின் இயல்புகளை கொண்டு சில விடைகளை எளிதாக கணக்கிட முடியும்.
1) உதாரணமாக, அ பெருக்கல் ஆ என்பதின் விடை ஆ பெருக்கல் அ என்றும் அமையும். இதனை ஒரு சமன்பாடு என்றும் எழுதலாம்,
அ x ஆ = ஆ x அ
இதனால் நீங்கள் 1 முதல் 15 வாய்ப்பாடு 12 எண்கள் வரை மனப்பாடம் செய்யும் வகை எவரும் கேட்டல் 1 முதல் 12 வாய்ப்படை 15 எண்கள் வரை மட்டுமே நினைவில் கொள்ள வேண்டும்!
2) மேலும், இரண்டில் ஏதேனும் ஒரு எண் 10, 100, 1000 என 10-இன் மூலம் ஆகா இருந்தால் அதன் விடை சுலபமாக மற்ற எண் பின் பூஜியுங்களை சேர்த்தது போல் அமையும்.
123 x 100 = 12,300
3) பெருக்கல் என்ற கணக்கின் விடை என்பதை கூட்டினால் ( modulo 9 ) இந்த பெருக்கலில் உள்ள இரு எண்களையும் modulo 9 கூட்டி மீண்டும் பெருக்கி மீண்டும் modulo 9 செய்த எண் என்பதற்கு சமம். இது ஒரு (necessary but not sufficient) தேவையான ஆனால் தீர்மானிக்கபடாத தேவை.
123 x 45 = 5535
இதனை எண்ணிம இலக்கு மூலம் கூடினால் (digital sum)
6 x 9 = 18, (இடது பக்கத்தில் 123 எண் 1 + 2 + 3 = 6, எனவும், 4 + 5 = 9 எனவும் மாறும்.)
5 4 = 9 ( வலது புரம் 1 + 8 = 9, இடது புரம் 6 x 9 = 54 எனவும் உள்ளது)
9 = 9
மேலும் பெருக்கல் என்பதற்கு நிறைய தன்மைகள் உண்டு. இவற்றை கற்று கொண்டால் நீங்கள், அல்லது உங்கள் மாணவர்கள், குழந்தைகள், இந்த வாய்ப்பாடு என்பதை கண்டு பயந்து ஓட வேண்டாம். கணிதம் என்பதை நண்பர் ஆகா ஆக்கி கொள்ளுங்கள்.